Published On:Monday, May 16, 2016
Posted by HASSAN
பாராளுமன்றம் நீரில் மூழ்கும் அபாயம்..! ராணுவம் களத்தில்
சீரற்ற காலநிலை காரணமாக பாராளுமன்ற கட்டிடத்தொகுதியை சுற்றியுள்ள குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பாதுகாப்பு படையினர் பாராளுமன்ற கட்டத்தொகுதியை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற கட்டிடத்தை சுற்றியுள்ள குளத்தின் நீர்மட்டம் கட்டல் மட்டத்தில் இருந்து 1.3 மீட்டர் எனவும் அது 1.8 மீட்டர் வரை உயரும் பட்சத்தில் நீர் பாராளுமன்ற கட்டத்திற்குள் புகும் என தெரிவிக்கப்படுகிறது.

