Published On:Friday, October 9, 2015
Posted by HASSAN
துனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தை குழுவிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு
துனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தை குழுவிற்கு (Tunisian National Dialogue Quartet) 2015ஆம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
துனிசியாவின் பன்முக ஜனநாயகக் கட்டமைப்பிற்கு பாரிய பங்களிப்பினைச் செய்தமைக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு அமைப்புகளை உள்ளடக்கிய இந்த பேச்சுவார்த்தைக் குழு துனிசியாவில் அரபு எழுச்சி தொடங்கிய நிலையில் அங்கு ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் ஏற்படப் பாடுபட்டது.

